சினிமா

ஓகே சொன்ன முன்னணி நடிகை…. இயக்குனராக மாறும் இசையமைப்பாளர்…

Published

on

தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து அருமையான மனதை மயக்கும் மெலடி பாடல்களை ரசிகர்களுக்கு கொடுத்தவர் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார். ராம்கி-பிரபு நடித்து 1987ம் ஆண்டு வெளியான ‘சின்னப்பூவே மெல்லப்பேசு’ படம் மூலம் அவர் அறிமுகமானார்.

அப்படத்திலேயே அனைத்து பாடல்களும் செம ஹிட். எனவே, தொடர்ந்து பல திரைப்படங்களுக்கு அவர் இசையமைக்க துவங்கினார். விக்ரமின் இயக்கத்தில் வெளிவந்த ‘புது வசந்தம்’ திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது.

மேலும், அவர் இசையமைப்பில் வெளிவந்த பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், சூர்ய வம்சம், பிரியமானவளே, வானத்தப் போல உள்ளிட்ட பல படங்கள் மெகா ஹிட் அடித்தது. பாடல்களும் ரசிகர்களின் மனதை மயக்கும் படி அமைந்திருந்தது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழிகளிலும் அவர் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆனால், கடந்த 15 வருடங்களுக்கும் மேல் அவர் திரைப்படங்களில் இசையமைக்கவில்லை.

இந்நிலையில், ஒரு புதிய படம் மூலம் இயக்குனராக மாறவுள்ளார். இவர் உருவாக்கிய கதை நடிகை டாப்ஸிக்கு மிகவும் பிடித்துப்போய்விட அவரிடம் நடிப்பதாக சம்மதம் தெரிவித்துவிட்டாராம். விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version