சினிமா செய்திகள்
காமராசருக்கு பிறகு நல்ல முதலமைச்சரை பார்க்க முடியவில்லை: எஸ்.ஏ.சந்திரசேகர்
காமராஜருக்கு பிறகு நல்ல முதலமைச்சரை பார்க்க முடியவில்லை என விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் சிம்பு தவிர கிட்டத்தட்ட அனைத்து நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மாநாடு படத்தில் முதலமைச்சராக நடித்திருந்த எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் இந்த விழாவில் பேசிய போது, ‘நான் ஏற்கனவே மூன்று படங்களில் முதலமைச்சராக நடித்து இருக்கிறேன். ஆனால் முதலமைச்சர் கதாபாத்திரம் நல்லவராக இருப்பதை பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் உண்மையில் காமராசருக்கு பிறகு நாம் நல்ல முதலமைச்சரை பார்க்கவில்லை என்று கூறினார்.
மேலும் இந்த சிம்பு இந்த நிகழ்ச்சிக்கு வராதது குறித்து அவர் கூறியபோது ’இன்று படப்பிடிப்பு இருந்திருந்தாலும் அவர் இங்கு வந்திருக்க வேண்டும் அவர் வராதது எனக்கு மனதிற்கு கஷ்டமாக உள்ளது என்றும், நடிகர்கள் வெற்றி வந்தவுடன் மாறிவிடக்கூடாது என்றும், படப்பிடிப்பில் நடந்துகொண்டது போலவே படம் வெளியான பிறகும் நடிகர்கள் நடந்து கொண்டால்தான் அவர்களுக்கு வெற்றி தொடரும் என்று கூறியுள்ளார்.
வெற்றி வந்தாலும் தோல்வி வந்தாலும் தாழ்மையுடன் இருக்க வேண்டுமென என் பிள்ளைக்கு நான் சொல்லி கொடுத்துள்ளேன் என்றும், அதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். எஸ்.ஏ சந்திரசேகர் அவர்களின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.