சினிமா செய்திகள்

தாய், தந்தையை வாசலில் காக்க வைத்தாரா விஜய்? எஸ்.ஏ. சந்திரசேகர் விளக்கம்

Published

on

நடிகர் விஜய்க்கும், அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்களுக்கும் இடையே பிரச்சினை இருந்து வருவதாகக் கூறப்படுகிறது என்பதும் இந்த பிரச்சனை நீதிமன்றம் வரை சென்று உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் நடிகர் விஜய் தனது தாய் ஷோபா மற்றும் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் ஆகிய இருவரையும் வாசலில் காக்க வைத்ததாகக் கூறப்படும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த தகவல் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் விளக்கம் அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து எஸ்ஏ சந்திரசேகர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது.

எனக்கும் எனது மகன் விஜய்க்கும் இடையே பிரச்சனை இருப்பது உண்மைதான். நான் இல்லை என்று சொல்ல மாட்டேன். ஆனால் அதே நேரத்தில் விஜய்க்கும் அவருடைய தாய்க்கும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. இருவரும் எப்பொழுதும் போல் தாய் மகனாக பழகி வருகிறார்கள் என்பதும், அடிக்கடி இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நானும் எனது மனைவி ஷோபாவும் விஜய் வீட்டுக்கு சென்றதாகவும் அப்போது விஜய் எங்களிருவரையும் வாசலில் காக்க வைத்ததாகவும், ஷோபா மட்டும் வீட்டுக்குள் அனுமதிக்க விஜய் கூறியதாகவும், அப்போது ஷோபா என்னுடன் காரில் வேகமாக சென்று விட்டதாகவும் செய்திகள் பரவி வருகிறது.

இது முழுக்க முழுக்க பொய்யானது. அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை. எனது மனைவி ஷோபாவும் எனது மகன் விஜய்யும் எப்பொழுதும் போல் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் இந்த வதந்திக்கு விளக்கம் அளிக்க வேண்டுமென்பதற்காகவே இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version