தமிழ்நாடு
டவுசர் மட்டுமல்ல பிரா, ஜட்டிகள் கூட கிழிக்கப்படும்.. மீண்டும் ஆபாச பதிவு.. திருந்தமாட்டாரா எஸ்.வி.சேகர்!
பெண் பத்திரிக்கையாளர்கள் பற்றி அவதூறாகப் பேசி சர்ச்சையை ஏற்படுத்திய எஸ்.வி.சேகர் மீண்டும் பெண் ஊடகவியலாளர்களைத் தாக்குவது போலக் கருத்தை டிவிட்டரில் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகத்தில் எச்.ராஜா, எஸ்.வி.சேகர் உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்கள், பெண்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் இழிவு படுத்தும் விதமாகப் பலமுறை சர்ச்சை கருத்துகளை வெளியிடுவது வாடிக்கையாகி வருகிறது.
இவர்கள் மீது புகார் கொடுத்தாலும், கைது செய்யப்படுவதில்லை. ஒரு வருடத்திற்கு முன்பு, பெண் பத்திரிக்கையாளர்களைத் தரக்குறைவாகப் பேசிய எஸ்.வி.சேகரை கைது செய்ய வேண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் காவல் துறை பாதுகாப்புடன் தமிழகம் முழுவதும் வலம் வந்ததும், திருமணம் இன்றில் அமைச்சர்கள் வரை சந்தித்துப் பேசியதும் சர்ச்சையானது.
இந்நிலையில் இன்று காலை புதிய சர்ச்சை டிவிட் ஒன்றை எஸ்.வி.சேகர் போட்டுள்ளார். அந்த டிவிவிட் போட்ட சில நிமிடங்களில் நீக்கப்பட்டு இருந்தாலும், அதை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த டிவிட்டர் பதிவில், “ஹிந்து சமூகத்தின் தலைமைப் பீடமாக விளங்கும் பிராமண சமூகத்தைக் கிள்ளுக்கீரையாக எண்ணும் இழிபிறவி ஊடகவியலாளர்களின் டவுசர் மட்டுமல்ல, பிரா, ஜட்டிகள் கூட கிழிக்கப்படும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.