சினிமா செய்திகள்

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் அம்மா மரணம்

Published

on

எஸ் பி பாலசுப்ரமணியம் தாய் சகுந்தலா அம்மா நெல்லூரில் மரணம்.

வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மகள் எஸ்பி ஷைலஜாவுடன் நெல்லூரில் வசித்து வந்த, பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் தாய் சகுந்தலா இன்று காலை இயற்கை எய்தினார்.

சகுந்தலாவின் மரணம் பற்றி தற்போது லண்டனில் இருக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாய் மரணம் அடைந்தது பற்றிய தகவல் அறிந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் அங்கிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார். இன்று மாலை அல்லது இரவுக்குள் அவர் நெல்லூர் வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை காலை நெல்லூரில் சகுந்தலாவின் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளன.

இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் லண்டனில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இருந்து வந்த நிலையில், தற்போது நாடு திரும்புகிறார்.

seithichurul

Trending

Exit mobile version