சினிமா செய்திகள்
மகன் விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஏ.சி!
நடிகர் விஜய்க்கும் அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் கடந்த சில நாட்களாக மோதல் போக்கு நிலவி வந்தது. குறிப்பாக சந்திரசேகரின் அரசியல் நிலைப்பாடுகளை விஜய் வெளிப்படையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டார். இதனால் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்த சந்திரசேகர், ‘நான் விஜய்யை எச்சரிக்கின்றேன்’ என்றால்லாம் பன்ச் அடித்தார்.
இதனால் விஜய் ரசிகர்களும் அவர் மீது கொதிப்பில் இருந்தனர். இந்நிலையில் அவர் விஜய்யிடம் மனிப்பு கேட்டு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இருவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக பேச்சுவார்த்தை ஏதும் கிடையாது என்றும் விஜய்யின் தாயார் ஷோபா கூறியிருந்தார். சில மாதங்களுக்கு முன்பு விஜய் பெயரில் அரசியல் கட்சியை சந்திர சேகர் தொடங்கினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அடுத்த சில நாட்களில் தனக்கும் இந்த கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், தனது ரசிகர்கள் தந்தை சந்திர சேகர் தொடங்கிய கட்சியில் சேரக்கூடாதும் என்றும் கூறி விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மகனுக்கும் தனக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கை முடிவுக்கு கொண்டுவர சந்திரசேகர் விரும்பியுள்ளார். இதன் காரணமாக மகனிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இன்னும் ஒரே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இந்த தேர்தலில் நேரடி அரசியலில் குதிக்கலாம் என்கிற முடிவில் எஸ்.ஏ.சி இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தான் இந்த மன்னிப்பு கேட்கும் விவகாரம் குறித்தான தகவலும் வந்துள்ளது.