வணிகம்
இந்தியாவின் மிகப்பெரிய மொழிபெயர்ப்பு நிறுவனமான ‘வெப்துனியா’-ஐ வாங்கிய இங்கிலாந்து நிறுவனம்!
![Webdunia - Bhoomitoday வெப்துதுனியா.காம் (webdunia.com / webdunia.net)](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/06/Webdunia.jpg)
உலகின் மிகவும் மதிப்புடைய மொழி சேவை வழங்கும் நிறுவனமான ஆர்டபள்யூஎஸ், இந்தியாவின் மிகப் பெரிய மொழி பெயர்ப்பு நிறுவனமான வெப்துனியாவை 159 கோடி ரூபாய் கொடுத்துக் கைப்பற்றியுள்ளது.
வெப்துதுனியா.காம் (webdunia.com / webdunia.net) நிறுவனம் இந்தியப் பிராந்திய மொழிகளில் இணையதள செய்தி தளம் மட்டுமல்லாமல், மொழி பெயர்ப்பு சேவையையும் வழங்கி வருகிறது.
ஆர்டபள்யூஎஸ் நிறுவனத்தின் மொராவியா மொழி பெயர்ப்பு பிரிவின் கூட்டாளியாக நீண்ட காலமாக வெப்துனியா நிறுவனம் இந்தியப் பிராந்திய மொழிகள் மட்டுமல்லாமல், பல்வேறு சர்வதேச மொழிகளுக்கு மொழி பெயர்ப்பு சேவையை வழங்கி வருகிறது.
இந்தியா மட்டுமல்லாமல், அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் வெப்துனியாவிற்கு அலுவலகம் உள்ளது. 2019-2020 நிதியாண்டில் 104 கோடி ரூபாய் வருவாயை வெப்துனியா ஈட்டி இருந்தது. தற்போது வெப்துனியா நிறுவனத்தின் மொழி பெயர்ப்பு சேவை பிரிவு மற்றும் 600 ஊழியர்களை ஆர்டபள்யூஎஸ் 159 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியா மட்டுமல்லாமல் ஐகானிக் எனும் மெஷின் மொழிபெயர்ப்பு நிறுவனத்தையும் ஆர்டபள்யூஎஸ் மிகப் பெரிய தொகை கொடுத்துக் கைப்பற்றியுள்ளது.