உலகம்

உக்ரைன் அணு உலை வெடித்தால் புல்பூண்டு கூட மிஞ்சாது: ரஷ்யாவுக்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

Published

on

உக்ரைனில் உள்ள அணு உலை ரஷ்யாவின் தாக்குதலால் தீப்பிடித்து எரிந்து வரும் நிலையில் உக்ரைன் அணு உலை வெடித்தால் நாடு முழுவதும் புல் பூண்டு கூட மிஞ்சாது என விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா, உக்ரைன் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் நேற்று ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய அணு உலையான உக்ரைன் அணு உலையில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் காரணமாக அணு உலையின் ஒரு பகுதியை தீப்பற்றி எரிவதாகவும், இந்த தீயை உக்ரைன் வீரர்கள் கட்டுப்படுத்த தீவிர முயற்சி எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் உள்ள அணு உலை வெடித்தால் நாடு முழுவதும் எரிந்து சாம்பலாகி விடும் என்றும் ஒரு புல் பூண்டு கூட மிஞ்சாது என்றும் சில விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இருப்பினும் உக்ரைன் அணுஉலையை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள ரஷ்யா தீவிர முயற்சி செய்து வருவதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version