கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கு 186 ரன்கள் இலக்கு: வெற்றி பெறுவது யார்?

Published

on

அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 4-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு இந்திய அணி 186 என்ற இலக்கை இந்திய அணி கொடுத்துள்ளது. இந்த இலக்கை இங்கிலாந்து அணி எட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஏற்கனவே நடைபெற்ற 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் இரண்டில் இங்கிலாந்து அணி வென்றுள்ளது. இன்றைய போட்டியிலும் வென்று விட்டால் தொடரை வென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 185 ரன்கள் எடுத்துள்ளது. சூர்யகுமார் யாதவ் மிக அபாரமாக விளையாடி 57 ரன்கள் எடுத்தார். ஸ்ரேயா 37 ரன்களும் ரிஷப் பண்ட் 30 ரன்களும் எடுத்து உள்ளனர். இங்கிலாந்து அணியின் ஆர்ச்சர் மிக அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் இங்கிலாந்து அணி 186 என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது. இன்றைய போட்டியில் புவனேஸ்வர்குமார், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகுல், ஹர்திக் பாண்டியா ஆகிய பந்துவீச்சாளர்கள் ஆவேசமாக பந்துவீசி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version