தமிழ்நாடு

என் உடலில் ஓடுவது அதிமுக ரத்தம்: பாஜக பிரபலம் பேச்சு!

Published

on

பாஜகவின் முக்கிய நிர்வாகி ஒருவர், எனது உடலில் ஓடுவது அதிமுக ரத்தம் தான் என கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் நயினார் நாகேந்திரன். ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக பிரமுகர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த கட்சியில் இருந்து விலகி அதன்பின்னர் பாஜகவில் இணைந்தார் என்பதும் பாஜகவின் மாநில துணைத் தலைவராக தற்போது அவர் பதவி வகித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் என் உடலில் ஓடுவது அதிமுக ரத்தம் தான் என கூட்டமொன்று பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என் உடலில் ஓடுவது அதிமுக ரத்தம் தான் என்றும் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தான் மீண்டும் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் கூறினார். மேலும் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் எனக்கு பாதுகாப்பான கட்சியாக பாஜக தெரிந்ததால் அந்த கட்சியில் இணைந்தேன் என்றும் அவர் தெரிவித்தார்.

பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் அதிமுக குறித்து பேசிய இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version