Connect with us

தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றிய அரசாணையில் விதிமீறல்!

Published

on

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு. பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கை முன்னர் சிபிசிஐடி போலிசார் விசாரித்து வந்தனர். ஆனால் இந்த வழக்கை நேற்று சிபிஐக்கு மாற்றியுள்ளது தமிழக அரசு. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதில் விதிமீறல் உள்ளதாக தற்போது குற்றம்சாட்டப்படுகிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளை பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு பின்னர் பாலியல் பலாத்காரம் செய்துவந்த கும்பல் ஒன்று சமீபத்தில் கைது செய்யப்பட்டது. இவர்களால் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பொள்ளாச்சி சம்பவத்தின் பின்னணியில் அரசியல் பலமும், சாதிய பலமும் நிறைந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனையடுத்து மாநில காவல் துறையிடம் இருந்து சிபிசிஐடி விசாரணைக்கு இந்த வழக்கை மாற்றியது தமிழக அரசு. அதன்படி சிபிசிஐடி தனது விசாரணையை தொடங்கியது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அரசியல் பின்புலம் இருப்பதால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றி நேற்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழக உள்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

பாலியல் புகார் அளிக்கும் பெண் தொடர்பான விவரங்களைப் பொதுவெளியில் வெளியிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் தமிழக அரசு வெளியிட்ட இந்த அரசாணையில் புகார் அளித்த பெண், அவர் படிக்கும் கல்லூரி, அவரது சகோதரர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருந்தன. இது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது, விதிமீறல் என சமூக ஆர்வலகள் குற்றம்சாட்டுகின்றனர்.

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், அவரது சகோதரர் பெயரைக் குறிப்பிட்டார் இது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்நிலையில் தமிழக அரசு அரசாணையில் அவர்களது பெயர் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஜோதிடம்53 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு1 மணி நேரம் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!