டிவி
வரதட்சணை கொடுமை இல்லை- விஜே சித்ரா மரணத்தில் ஆர்டிஓ விளக்கம்
நடிகை மற்றும் விஜே ஆகப் பணியாற்றி வந்த சித்ரா சில நாட்களுக்கு முன்னர் தூக்கிட்ட நிலையில் மரணித்திருந்தார்.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தார் உட்பட பல தரப்பினரும் கேள்வி எழுப்பி இருந்தனர். சித்ரா மரணம் தொடர்பாக நடந்த விசாரணையில் அவரது கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டார். சித்ரா மரணம் தற்கொலைதானா என்பதை விசாரிக்கும் பணியை ஆர்டிஓ அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
![விஜே சித்ரா](https://assets.thehansindia.com/h-upload/2020/12/22/1019917-vj-chitra.webp)
விஜே சித்ரா
விசாரணையில் குடும்பத்தார், கணவர் குடும்பத்தார், சக நடிகர் நடிகைகள், நட்பு வட்டாரத்தினர் என அனைவரும் ஆர்டிஓ விசாரணைக்கு வந்த வண்ணம் இருந்தனர். இதில் தற்போது சித்ரா மரணத்துக்கு வரதட்சணை கொடுமை ஒரு காரணம் இல்லை என்பதை ஆர்டிஓ அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கூடுதல் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.