டிவி

நடிகை சித்ராவின் மரணம் குறித்து பெற்றோர், ஹேம்நாத்திடம் இன்று விசாரணை!

Published

on

சித்ராவின் மரணம் தொடர்பாக அவரது பெற்றோரிடமும், ஹேம்நாத்திடமும் இன்று ஆர்டிஓ விசாரணை நடைபெறுகிறது.

சின்னத்திரை நடிகை சித்ரா அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சித்ராவுக்கு ஏற்கெனவே ஹேம்நாத் என்பவருடன் பதிவு திருமணம் நடந்ததால், இந்த வழக்கு ஆர்டிஓ விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சித்ராவின் தாய், ஹேம்நாத் ஆகியோர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே சித்ரா தற்கொலை செய்து கொண்டதாகவும், தற்கொலை செய்வதற்கு முன்பு நீண்ட நேரம் போனில் பேசியதாகவும் கூறப்படுகிறது. சித்ராவின் தற்கொலையில் முறையான ஆவணங்கள் கிடைத்தவுடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், இன்று திங்கட்கிழமை முதல் சித்ராவின் மரணம் குறித்து ஆர்டிஓ விசாரணை நடைபெறுகிறது. முதலில் சித்ராவின் பெற்றோரிடமும், அதனைத் தொடர்ந்து ஹேம்நாத்திடமும் ஆர்டிஓ விசாரணை நடைபெறுவதாக தகவல்கள் வந்துள்ளன.

Trending

Exit mobile version