இந்தியா

ஜெய்ஸ்ரீராம் முழக்கத்தை ஏற்க முடியாது…மாணவிக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ்

Published

on

கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததை அடுத்து பெரும் பதட்டம் ஏற்பட்டது. அந்த மாணவிகள் கல்லூரிகள் அனுமதிக்கப்படாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதோடு, கல்லூரி மாணவர்களின் போர்வையில் அரசியல் கட்சியை சேர்ந்த பலரும் காவி துண்டை அணிந்து கல்லூரிகளுக்குள் நுழைந்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழங்கி ஆர்ப்பாட்டம் செய்யும் வீடியோக்களும் வெளியானது. மேலும், கர்நாடகாவை சேர்ந்த பாஜகவினர் இதை கையில் எடுத்து அரசியல் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், ஹிஜாப் அணிந்து வந்த ஒரு கல்லூரி பெண்ணின் அருகில் சென்று பலர் ‘ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்’ என முழங்கினர். ஆனாலும் அந்த மாணவி அஞ்சவில்லை. மேலும், அவர்களை எதிர்க்கும் விதமாக ‘அல்லாஹு அக்பர்’ என முழங்கினார். தனக்கு எதிராக அத்தனை பேர் இருந்தும் அவர் அஞ்சவில்லை. சிங்கப்பெண்ணாக எதிர்ப்பை தெரிவித்து நெட்டிசன்களின் பாராட்டை பெற்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதன் பின்னரே இந்த விவகாரம் சூடு பிடித்தது.

hijab

ஒருபக்கம், ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை என மாணவர்கள் தொடர்ந்த வழக்கு சமீபத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில், தீர்ப்பளித்த கர்நாடக உயர்நீதிமன்ற அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் கல்லூரிகளுக்கு அணிந்து செல்ல தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த வழக்கு விசாரணையை திங்கள் கிழமைக்கு ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக கர்நாடக கல்லூரி மாணவ அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், ஹிஜாப் இந்திய பாரம்பரியத்தின் ஒரு அங்கம். மாணவிக்கு எதிராக ஜெய் ஸ்ரீராம் என மாணவர்கள் முழக்கமிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆர்.எஸ்.எஸ் இஸ்லாமிய பிரிவு தெரிவித்துள்ளது. பாஜகவின் தாய் கழகமான ஆர்.எஸ்.எஸ்-ஸின் ஒரு அங்கமான இஸ்லாமிய பிரிவே இதை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version