இந்தியா
அயோத்தியில் ராமர் கோயில் விரைவில் கட்டப்படும்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்!
அயோத்தி ராமர் கோவில் விவகாரம் நீண்ட காலமாக உள்ள ஒரு சர்ச்சைக்குறிய விவகாரம். இந்நிலையில் விரைவில் ராமர் கோயில் அயோத்தியில் கட்டப்படும் என ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் நியாயமான முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் மத்தியஸ்தர்கள் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவின் கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மத்தியில் பாஜக மீண்டும் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியமைக்க இருக்கும் நிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஒரு விழாவில் கலந்துகொண்டு ராமர் கோயில் விவகாரம் தொடர்பாக பேசியுள்ளார்.
அதில், ராமருக்காகச் செய்து முடிக்க வேண்டிய பணிகளைச் செய்தாக வேண்டும். இல்லையெனில் விரைவில் செய்யப்படும். அந்த பணியை வேறு யாரிடமாவது நாம் ஒப்படைத்தால், அவர் அதைச் செய்கிறாரா என்று நாம் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். நாமே செய்ய வேண்டும் என்று இருந்தால் அதை நாமே செய்ய வேண்டும் என அதிகாரத்தொனியில் பேசியுள்ளார் மோகன் பாகவத்.