தமிழ்நாடு

சாலை விபத்தில் உயிரிழந்த வாகன ஆய்வாளர் குடும்பத்துக்கு நிதியுதவி: எத்தனை லட்சம்?

Published

on

சாலை விபத்தில் உயிரிழந்த வாகன ஆய்வாளர் குடும்பத்திற்கு நிதி உதவி அறிவிப்பை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

கரூரை சேர்ந்த வாகன ஆய்வாளர் கனகராஜ் அவர்கள் வாகன தணிக்கையின் போது சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று ஆடு திருடியவர்களை பிடிக்க முயற்சித்த சிறப்பு எஸ்ஐ பூமிநாதன் அவர்கள் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று கரூர் வாகன ஆய்வாளர் கனகராஜ் அவர்கள் உயிரிழந்திருந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வாகன தணிக்கையின் போது சாலை விபத்தில் உயிரிழந்த கரூர் வாகன ஆய்வாளர் கனகராஜ் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதி உதவி செய்யப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் கனகராஜ் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஆடு திருடியவர்களை பிடிக்க முயற்சித்து கொலை செய்யப்பட்ட சிறப்பு எஸ்ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் ரூபாய் ஒரு கோடி நிதி உதவி என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version