இந்தியா

கரூர் வைஸ்யா வங்கிக்கு ரூ.30 லட்சம் அபராதம்.. ஏன் தெரியுமா?

Published

on

தமிழகத்தில் உள்ள கரூரை தலைமையிடமாக கொண்டு இந்தியாவின் பல பகுதிகளில் கிளைகளாக கொண்டு இயங்கி வரும் வங்கி கரூர் வைஸ்யா வங்கி. குறிப்பாக கிராமப்புறத்தில் அதிக கிளைகளை தொடங்கி இருக்கும் வங்கிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி கரூர் வைஸ்யா வங்கிக்கு ரூபாய் 30 லட்சம் அபராதமாக விதித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளும் விதிமுறைகளை சரியாக கடைபிடிக்கின்றதா என்பதை கண்காணித்து வருகிறது என்பதும் வங்கி நிர்வாகம் மெத்தனமாக இருக்கும் போது விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அபராதமும் விதித்து வருகிறது என்பதை தெரிந்ததே.

rbi

ஏற்கனவே கடந்த சில வாரங்களில் கூட்டுறவு வங்கிகள் உட்பட பல வங்கிகளுக்கு அபராதம் விதித்துள்ள இந்திய ரிசர்வ் வங்கி தற்போது கரூர் வைஸ்யா வங்கிக்கும் அபராதம் விதித்துள்ளது. கரூர் வைஸ்யா வங்கி இந்திய ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை விதிகளை சரியாக கடைபிடிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 21 முதல் இந்த ஆண்டு மார்ச் 4ஆம் தேதி வரையில் இந்த வங்கியினை ஆய்வு செய்த ரிசர்வ் வங்கி சில கணக்குகளை மோசடி என முடிவு செய்துள்ளது என்றும் ஆனால் அதனை ரிசர்வ் வங்கியிடம் தெரிவிக்க தவறிவிட்டது என்றும் கூறப்படுகிறது. இந்த விதிமுறை மீறல் காரணத்திற்காக கரூர் வைஸ்யா வங்கிக்கு 30 லட்சம் ரூபாய் அபராதத்தை இந்திய ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.

கரூர் வைஸ்யா வங்கி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டு பின்னரே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது ஆனால் அதே நேரத்தில் வங்கி வாடிக்கையாளர்களின் பணத்திற்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version