Connect with us

இந்தியா

உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து தானாக ரூ.20 கழிகிறதா.. அப்படியென்றால் இதுதான் காரணம்!

Published

on

உங்கள் வங்கி கணக்கில் இருந்து தானாக 2 ரூபாய் கழிந்து இருந்தால் அதற்கு பிரதமரின் சுரக்ஷா பீமா யோஜனா என்ற காப்பீட்டு திட்டம் தான் காரணம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

பெரும்பாலும் வங்கி கணக்கில் உள்ள தொகையை, வரவு செலவுகளை அவ்வபோது அனைவரும் கண்காணிப்பது வழக்கமான ஒன்றுதான். இதில் ஒரு சிலர் தங்களது வங்கி கணக்கில் ரூபாய் 20 தானாக கழிந்திருப்பதை கண்டுபிடித்திருப்பார்கள். அது எதனால் என்பது தெரியாமல் இருக்கும் நிலையில் சிலர் வங்கி நிர்வாகத்தை அணுகி விளக்கம் கேட்டு இருப்பார்கள்.

அந்த வகையில் உங்களுக்கு தானாக ரூ.20 கழிந்து இருந்தால் அதற்கு பிரதமரின் காப்பீட்டு திட்டம் தான் காரணம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். பொது மக்களுக்கு காப்பீட்டுத் தொகையை வழங்குவதற்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டில் இரண்டு காப்பீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அதில் ஒன்று பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, இன்னொன்று பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா.

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்பது ஒரு விபத்துக் காப்பீட்டுத் திட்டமாகும். இது விபத்தினால் ஏற்படும் மரணம் மற்றும் விபத்து காரணமாக ஏற்படும் ஊனத்திற்கு காப்பீடு வழங்குகிறது. இது ஒரு வருட காப்பீடாக இருக்கும். ஆண்டுதோறும் இதனை புதுப்பிக்க வேண்டும்.

இந்த காப்பீடு திட்டத்திற்காக ஜூன் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரையிலான ஒரு வருட காலப்பகுதிக்கு ஒவ்வொரு வருடமும் முழு வருடாந்திர பிரீமியத்தை செலுத்த வேண்டும். வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த திட்டத்தின் பிரிமியம் தொகையான ரூ.20 ஆட்டோ டெபிட் மூலம் கழிந்துவிடும்.

இந்த திட்டத்திலிருந்து வெளியேற விரும்பும் அந்த ஆண்டின் ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு முன் வங்கிக்கு எழுத்துபூர்வமாக தகவல் அளித்தால் அவர்களது காப்பீடு திட்டம் நிறுத்தப்படும். இதற்காக, பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்துடன் உங்கள் கணக்கு இணைக்கப்பட்டுள்ள உங்கள் வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டும். நீங்கள் அதற்குரிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பிரீமியம் கட்டணத்தை நிறுத்துமாறு கோரலாம்.

மேலும், உங்கள் வங்கிக் கணக்கில் தேவையான நிதி இல்லை என்றால், பிரீமியத்தை தானாக டெபிட் செய்வது சாத்தியமில்லை என்பதாலும், பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்19 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!