கிரிக்கெட்

சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு அபராதம்: எத்தனை லட்சம் தெரியுமா?

Published

on

மெதுவாக பந்து வீசியதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 189 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து 190 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த போட்டியின்போது டெல்லி அணிக்கு எதிராக பந்து வீசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மெதுவாக பந்து வீசியதாக தெரியவந்தது.

இதனையடுத்து சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சிஎஸ்கே வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version