தமிழ்நாடு

தமிழக பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு: செப். 15 முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய்!

Published

on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் ஆகியது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் இன்று தாக்கல் செய்தார். இதில் குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை மாதம் 1000 ரூபாய் குறித்தான அறிவிப்பு வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதனை எதிர்பார்த்தது போலவே நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக பட்ஜெட்டில் அறிவித்தார்.

#image_title

அவரது அறிவிப்பில் வரும் செப்டம்பர் 15 முதல் குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகையாக 1000 ரூபாய் மாதம்தோறும் வழங்கப்படும். புரட்சியை ஏற்படுத்தும் இந்த திட்டத்திற்காக 7000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள் முதல்வர் ஸ்டாலின் இதனை தொடங்கி வைக்கிறார். தகுதிவாய்ந்த குடும்பங்களுக்கு இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார் நிதியமைச்சர்.

முன்னதாக, ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மகளிருக்கான மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் மார்ச் மாதம் வரவுள்ள நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படும். நிதிநிலை சரியாக இருந்திருந்தால் ஆட்சிக்கு வந்த உடனேயே இதனை நிறைவேற்றி இருப்போம் என்றார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version