தமிழ்நாடு

ரூ.1000 கோடி வருவாய் மறைக்கப்பட்டதா? சரவணா ஸ்டோர்ஸ் ரெய்டில் அதிர்ச்சி தகவல்!

Published

on

சரவணா ஸ்டோர் நிறுவனத்தில் கடந்த சில நாட்களாக வருமானவரித் துறையினர் ரெய்டு செய்த நிலையில் ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் மறைக்கப்பட்டதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கோவை ஆகிய இடங்களில் சூப்பர் சரவணா ஸ்டோர் நிறுவனங்களில் சமீபத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளால் ரெய்டு நடத்தப்பட்டது. இதில் 1,000 கோடி ரூபாய் வருவாய் மறைத்தது தெரிய வந்துள்ளதாக வருமான வரி வருமான வரித்துறையின் அதிகாரிகளிடமிருந்து தகவல்களை அமைந்துள்ளது.

மேலும் 37 இடங்களில் நடந்த ரெய்டில் ரூபாய் 80 கோடிக்கு போலி பில் தயாரித்து மோசடி செய்யப்பட்டதாகவும் வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை சரவணா ஸ்டோர் நிறுவனம் மறைத்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி வருமானவரித்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

seithichurul

Trending

Exit mobile version