தமிழ்நாடு

வைக்கோல்போரில் பதுக்கிய ரூ.1 கோடி: ஐடி அதிகாரிகள் கைப்பற்றியதால் பரபரப்பு

Published

on

அதிமுக வேட்பாளர் ஒருவர் வைக்கோல் போரில் ரூபாய் ஒரு கோடி பதுக்கி வைத்ததை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மணப்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ சந்திரசேகர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரசாரம் செய்து கொண்டு வரும் நிலையில் திடீரென அவரை குறிவைத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

முதலில் அவரது ஓட்டுநர் அழகர்சாமி உள்பட ஒரு சிலரிடம் வருமானவரித் துறையினர் விசாரணை செய்து அவர்களது வீட்டில் சோதனை செய்தனர். ஆனால் பணம் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் வருமானத் துறை அதிகாரிகளின் சந்தேகம் நீங்கவில்லை.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் வருமானத் துறை அதிகாரிகள் திடீரென அழகர்சாமி வீட்டுக்கு சென்றபோது அழகர்சாமி வீடு அருகே ஒரு வைக்கோல்போர் ஒன்று இருந்தது. அதன் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. உடனடியாக வைக்கோல் போரைப் பிரித்து பார்த்தபோது 500 ரூபாய் நோட்டுக்கள் கட்டுகட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ரூபாய் ஒரு கோடி அதில் இருந்ததாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்/ இதனை அடுத்து அழகர்சாமியிடமும், அவரது குடும்பத்தினரிடமும் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version