சினிமா செய்திகள்
வெற்றி என்பது ஹீரோக்களால் இல்லை: நிரூபித்த ‘ஆர்.ஆர்.ஆர்’ மற்றும் ‘ஆச்சார்யா’
மாஸ் நடிகர்கள் நடித்தால் அந்த படம் வெற்றி பெற்று விடும் என்ற மாயை பொய்த்து விட்டது என்றும் ஒரு திரைப்படம் வெற்றி பெறுவது முழுக்க முழுக்க இயக்குனர் கையில்தான் உள்ளது என்றும் ‘ஆர்.ஆர்.ஆர்’ மற்றும் ஆச்சார்யா திரைப்படங்கள் நிரூபணம் செய்து உள்ளது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் என்ற இரண்டு மாஸ் நட்சத்திரங்கள் நடித்த ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த மாபெரும் வசூலுக்கு முக்கிய காரணம் இரண்டு மிகப் பெரிய நடிகர்களை ஒன்று சேர்த்தது தான் என்று கூறப்பட்டது.
ஆனால் அதே நேரத்தில் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் தேஜா ஆகிய இரண்டு மாபெரும் நடிகர்கள் நடித்த ஆச்சார்யா திரைப்படம் போதிய வரவேற்பு இன்றி தோல்வி அடைந்துள்ளது. இதை வைத்து பார்க்கும்போது மாஸ் நடிகர்கள் படத்தில் இருந்தால் ஓப்பனிங் வசூல் வேண்டுமானால் நன்றாக இருக்கும், ஆனால் ஒரு திரைப்படம் தொடர்ந்து வசூல் செய்ய வேண்டுமானால் அது இயக்குனர்களின் கையில்தான் உள்ளது என்பதை நிரூபிக்கப்பட்டுள்ளது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
அதேபோல்தான் நம்மூரிலும் மிகப்பெரிய வெற்றிபெற்ற அஜீத்-விஜய் படங்களுக்கு கிடைத்த வெற்றிக்கு இயக்குனர்கள் தான் காரணம் என்றும், மாஸ் ஸ்டார் இருந்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்பது முழுக்க முழுக்க பொய்யான ஒரு தகவல் என்றும், ஆனால் அதை நடிகர்கள் இந்த உண்மையை புரிந்துகொள்ளாமல் தங்களால் தான் வெற்றி பெற்றதாக கூறிக் கொண்டு வருவதுதான் அவர்களது அடுத்தடுத்த படங்களின் வீழ்ச்சிக்கு காரணமாக உள்ளது என்றும் நெட்டிசன்கள் கூறுகின்றனர்.