சினிமா செய்திகள்

‘ஆர்.ஆர்.ஆர்’ ஓடிடி ரிலீஸில் ஒரு ஷாக் நியூஸ்: ரசிகர்கள் அதிர்ச்சி

Published

on

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில், ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்ததாகவும் தகவல் வெளியான நிலையில் தற்போது வரும் 20ஆம் தேதி இந்த படம் ஜீ ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் ஒரு செய்தியும் வெளியாகி உள்ளது.

இந்த படம் ஒரு முறை பார்ப்பதற்கு கட்டணம் என்று வசூலிக்க படுவதாகவும் ஒரு முறை பார்த்து விட்டால் அதன் பிறகு மீண்டும் பார்க்க முடியாது என்ற வகையில் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே நமது இஷ்டம் போல் கொஞ்சம் கொஞ்சமாக படம் பார்க்க முடியாது என்றும் ஒரு முறை பார்த்து விட்டால் அந்த கட்டணம் காலாவதியாகி விடும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஒரு சில திரைப்படங்கள் இதே மாதிரி Pay Per View என்ற வகையில் ரிலீஸாகி இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக Pay Per View மூலம் ஓடிடியில் எந்த படம் ரிலீசாகவில்லை .

இந்த நிலையில் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் தற்போது Pay Per View என்ற வகையில் ரிலீஸ் ஆக இருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தை ஏராளமானவர்கள் ஓடிடியில் பார்க்க விருப்பம் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version