சினிமா செய்திகள்

ஆர்ஆர்ஆர் படம் ரிலீஸ் எதிரொலி.. திரையரங்கில் முள் கம்பி வேலி.. ரசிகர்கள் அதிர்ச்சி!

Published

on

ஆர்ஆர்ஆர் படம் வெள்ளிக்கிழமை ரிலீஸாக உள்ள நிலையில், ஆந்திராவில் திரையரங்கு ஒன்றில் திரைக்குப் பாதுகாப்பாக முள் கம்பி வேலி அமைத்துள்ள சம்பவம் ரசிகர்களிடையில் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

ரசிகர்கள் அதிகம் உள்ள பிரபல நடிகர்களின் படம் திரையரங்குக்கு வரும் போது, அவர்களது ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் திரையரங்கின் திரை முன்பு சென்று நடனமாடுவது, பட்டாசு வெடிப்பது என ரகளையில் ஈடுபடுவார்கள். அதனால் சில சமயங்களில் திரை கிழிந்து ஓட்டுப்போட்டுப் படத்தைக் காண்பிப்பார்கள்.

நாளை இந்தியா முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்ஆர்ஆர் படம் ரிலீஸ் ஆக உள்ளது. ஜுனியர் என்டிஆர், ராம் சரன் என ஆந்திர திரை உலகின் 2 முக்கிய ஸ்டார்கள் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவகான் நடித்துள்ளார்.

பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கிய ராஜமவுளி இந்த படத்தை இயக்கியுள்ளார். எனவே ஆர்ஆர்ஆர் படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.

படம் திரையில் ஓடிக்கொண்டு இருக்கும் போது ரசிகர்களின் ஆர்வம் மிகுதியால் திரைக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆந்திரா ஸ்ரீகாகுளம் பகுதியில் திரையரங்கம் ஒன்று திரைக்கு முன்பு முள் கம்பி வேலி ஒன்றை அமைத்துள்ளது.

எனவே அந்த திரை அரங்கிற்குச் சென்று ஆர்ஆர்ஆர் படம் பார்க்க இருக்கும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version