சினிமா

ராஜமௌலி இயக்கும் “ஆர்ஆர்ஆர்“ படத்தில் முக்கிய வேடத்தில் பிரியாமணி!

Published

on

தமிழில் பருத்திவீரன் படத்தில் நடித்து தேசிய பெற்றவர் பிரியாணி. அவர் ஹிந்தியிலும் ஒரு படத்தில் நடித்தார். அதனை அடுத்து தென்னிந்திய படங்களில் பரவலாக நடித்து வருகின்றார். இவர் திருமணத்திற்குப் பிறகும் நடிப்பைத் தொடர்ந்து வருகிறார். 2007-ம் ஆண்டு ஜூனியர் என் டி ஆரை வைத்து ராஜமௌலி இயக்கியிருந்த எமடோன்கா என்ற தெலுங்கு படத்தில் பிரியாமணி நாயகியாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

`பாகுபலி’ என்னும் வெற்றிப் படத்தை இயக்கியவர் ராஜமௌலி. தற்போது ராஜமவுலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். நவம்பர் 11-ம் தேதி இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

இரண்டு பாகங்களாக உருவான இந்தப் படம் சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டன. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியான இந்தப் படங்கள் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்துச் சாதனை படைத்தன. இதனால் இயக்குநர் ராஜமௌலி அடுத்ததாக இயக்க இருக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் தனது அடுத்தப் பட அறிவிப்பை இயக்குநர் ராஜமௌலி வெளியிட்டார். ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாக இருக்கும் இந்தப் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர். – ராம் சரண் தேஜா இருவரும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். இந்தப் படத்தை, டி.வி.வி.தனய்யா தயாரிக்கிறார். ரூ.300 கோடி பட்ஜெட்டில் இந்தப் படம் தயாரிக்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version