கிரிக்கெட்
கடைசி ஓவரில் இரண்டே ரன்கள்: சென்னைக்கு 157 இலக்கு கொடுத்த ஆர்சிபி!
![rcb vs csk - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/rcb-vs-csk.jpg)
இன்று நடைபெற்ற சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கு 157 என்ற இலக்கை பெங்களூர் அணி கொடுத்துள்ளது.
ஐபிஎல் 35வது இன்றைய போட்டியில் சென்னை அணி டாஸ் வென்றதை அடுத்து பந்து வீச முடிவு செய்தது. இதனை அடுத்து இன்று பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி மற்றும் படிக்கல் ஆகியோர்கள் ஒப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கி பொறுப்புடன் விளையாடினர். அவர்கள் இருவரும் மிக அருமையாக முதல் விக்கெட்டுக்கு ஜோடி 111 ரன்கள் எடுத்தனர்.
பெங்களூரு அணி 111 ரன்கள் என்று இருந்த நிலையில் கேப்டன் விராட் கோலி அவுட் ஆனார். அதன்பின்னர் டிவில்லியர்ஸ் 12 ரன்களும், மாக்ஸ்வெல் 11 ரன்களூம், டிம் டேவிட் ஒரே ஒரு ரன்னும், ஹர்ஷல் பட்டேல் 3 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
சென்னை அணி 16 முதல் 20 ஓவர்கள் வரை மிகவும் சிறப்பாக பந்துவீசியதை அடுத்து 4 ஓவர்களில் சேர்த்து 25 ரன்கள் மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் 157 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் சென்னை அணி பேட்டிங் செய்ய உள்ளது. சென்னை அணியில் ருத்ராஜ், டுபிளஸ்சிஸ், அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, தோனி, ஜடேஜா, பிராவோ, நீண்ட பேட்டிங் வரிசை இருப்பதால் இந்த இலக்கை மிக எளிதில் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.