சினிமா செய்திகள்

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிவிட்டாரா ரோஷினி? காரணம் இதுதான்!

Published

on

பாரதி கண்ணம்மா என்ற தொலைக்காட்சி சீரியல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பாக இந்த சீரியலில் கண்ணம்மா என்ற கேரக்டரில் நடித்து வரும் ரோஷினிக்கு மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொதுவாக சீரியலாக இருந்தாலும் சரி, திரைப்படமாக இருந்தாலும் சரி, நல்ல கலர் உள்ளவர்களுக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கலர் சற்று குறைவான ரோஷினிக்கு மிகப் பெரிய கேரக்டர் கிடைத்தது என்பதும் அந்த கேரக்டர் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் இருந்து ரோஷினி திடீரென விலகி விட்டதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சின்னத்திரை வட்டாரங்களில் விசாரித்தபோது ரோஷினிக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து இருப்பதாகவும் அதன் காரணமாகவே அவர் சீரியலில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

குறிப்பாக தமிழ் சினிமாவின் மிகப் பெரிய பேனர் ஒன்றில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்ததாகவும், இந்த நேரத்தில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இரண்டு குழந்தைக்கு தாயாகவும் நடித்துக்கொண்டிருபது என்பது சரியாக இருக்காது என்பதால் அவர் சீரியலில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து பாரதிகண்ணம்மா சீரியல் கண்ணம்மா கேரக்டரில் ரோஷினிக்கு பதிலாக விரைவில் வேறு ஒருவர் தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வெண்பா கேரக்டரில் நடித்து வரும் நடிகை பிரீத்தா தற்போது கர்ப்பமாக இருப்பதால் விரைவில் அவரும் சீரியல் இருந்து விலக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version