கிரிக்கெட்

மோசமான ஃபார்மில் ரோஹித் சர்மா: இந்திய அணியில் இருந்தும் தூக்கப்படுவாரா?

Published

on

மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா மோசமான ஃபார்மில் இருப்பதால் அவர் இந்திய அணியில் இருந்து தூக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

ஐபிஎல் தொடர் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் விளையாடிய மும்பை அணி மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இதனை அடுத்து புள்ளி பட்டியலில் கிட்டத்தட்ட கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை மற்றும் இரண்டாவது இடம் பெற்ற மும்பை ஆகிய இரண்டு அணிகளுமே மோசமான ஃபார்மில் உள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

இந்த நிலையில் ரோகித் சர்மா கடந்த மூன்று போட்டிகளில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார் என்றும் இதனை இந்திய அணித் தேர்வாளர்கள் கவலை படுவார்கள் என்றும் அவர் சிறந்த பார்மில் இல்லை என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார் .

ஐபிஎல் தொடரில் இதே ரீதியில் ரோஹித் சர்மா விளையாடினால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version