கிரிக்கெட்

ரோஹித் ஷர்மாவுக்கு மிகவும் பிடித்த வீரர் யார் தெரியுமா?

Published

on

இந்திய அதிரடி கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா ஒரு நாள் போட்டிகளில் அதிக முறை இரட்டை சதம் அடித்த மிகவும் அரிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். இவருக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்விக்கு அவர் தற்போது பதில் அளித்துள்ளார்.

ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் வர உள்ள நிலையில் அதற்கான இந்திய அணியை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். விராட் கோலிக்கு ஆசிய கோப்பை போட்டியில் ஓய்வு அளித்துள்ள நிலையில் இந்த தொடருக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து தனது ரசிகர்களின் கேள்விக்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ளார் ரோஹித் ஷர்மா. அதில் இந்தத் தலைமுறை வீரர்களுள் யாருடைய ஆட்டத்தைப் பார்க்க உங்களுக்குப் பிடிக்கும் என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஏபி டி வில்லியர்ஸ்தான் என பதிலளித்தார் ரோஹித் ஷர்மா. அந்த ரசிகரும் இந்த பதிலைத்தான் எதிர்பார்த்ததாக கூறியுள்ளார்.

Trending

Exit mobile version