விளையாட்டு
பீஃப், போர்க் என வெளுத்துக்கட்டிய ரோகித் சர்மா… புதிய சர்ச்சையைக் கிளப்பிய நெட்டிசன்கள்
இந்தியக் கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.
சமீபத்தில் அணியினருடன் இணைந்த ரோகித் சர்மா கடந்த வாரம் ரிஷப் பண்ட், சுப்மன் கில், நவ்தீப் சைனி, பிரித்வி ஷா ஆகியோர் உடன் இணைந்து வெளியில் ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டுள்ளார். கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறியதாக ரோகித் சர்மா உட்பட ஐந்து வீரர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த சர்ச்சையே இன்னும் முடிந்தபாடில்லை. அதற்குள் அந்த ஹோட்டல் சாப்பாட்டு பில் ஒன்று தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் மாட்டுக்கறி, பன்னிக்கறி என நண்பர்கள் ஐவரும் வெளுத்துக் கட்டியுள்ளனர். இதனால் ரோஹித் சர்மா இதையெல்லாம் சாப்பிடலாமா என ஒருக் கூட்டம் கடுமையான விமர்சனங்களை ட்விட்டரில் முன் வைத்து வருகிறது.
மற்றொரு புறம் இன்னொரு கூட்டம் ரோகித் சர்மா சாப்பிட்டதுக்கு எல்லாம் ஒரு பஞ்சாயத்தா என ரோகித்துக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்து வருகின்றனர்.
Bc mere saamne waale table par gill pant sharma saini fuckkkkkk pic.twitter.com/yQUvdu3shF
— Navaldeep Singh (@NavalGeekSingh) January 1, 2021