கிரிக்கெட்
சென்னை டெஸ்ட்: ரோஹித் சர்மா அபார சதம்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார்.
இதனை அடுத்து ரோகித் சர்மா மற்றும் கில் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய நிலையில் 2-வது ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் கில் விக்கெட்டை இழந்ததார். அதேபோல் கேப்டன் விராத் கோலியும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
இருப்பினும் ரோஹித் சர்மா மிக அபாரமாக விளையாடி சற்றுமுன் சதம் அடித்தார். அவர் 149 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் தற்போது 112 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மாவுடன் விளையாடி வரும் ரஹானே 34 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி 46 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியின் ஸ்டோன், லீச், மற்றும் மொயீன் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி உள்ளனர்