கிரிக்கெட்

“ரிஷப் பன்ட்ட சும்மா விடுங்க… தொந்தரவு செய்யாதீங்க!”- மீடியா மீது பொங்கும் ரோகித் சர்மா

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் மேட்ச் வின்னராக உருவெடுத்திருக்கிறார் ரிஷப் பன்ட். அவர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்நிலையிலங் ரிஷப் பன்ட் செய்த சாதனைகளை இன்னொருவரால் முறியடிக்கவே முடியாது என்று அடித்துச் சொல்லி புகழாரம் சூட்டியுள்ளார் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்திய கிரிக்கெட் அணி கைப்பற்றி வரலாற்றுச் சாதனைப் புரிந்த கையோடு, இங்கிலாந்துக்கு எதிராகவும் டெஸ்ட் தொடரை வென்றது. இதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் இந்தியா முன்னேறியுள்ளது. இந்த இரு தொடர்களையும் இந்தியா, வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பன்ட். இரு தொடர்களில் பன்ட் சதம் விளாசிய போட்டிகளில், அவர் அதிரடி பேட்டிங் காரணமாக இந்தியா வெற்றி பெறும் நிலை ஏற்பட்டது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரைக் கைப்பிற்றியுள்ள இந்திய அணி, அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்துக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி நாளை ஆரம்பிக்கிறது. இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளும் குஜராம் மாநிலத்தில் இருக்கும் அகமதபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் தான் நடைபெறுகிறது. இதையடுத்து இந்திய அணியினர் தீவிரப் பயிற்சி எடுத்து வருகின்றனர்.

டி20 தொடரிலும் ரிஷப் பன்ட் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பன்ட் குறித்து அதிகம் கேள்விகள் எழுப்பப்பட்ட காரணத்தினால் உஷ்ணமான ரோகித், ‘இந்திய அணி நிர்வாகம், ரிஷப் பன்டை பெரிதாக தொந்தரவு செய்யாமல் விட்டுவிடுகிறது. அவர் போக்கில் கிரிக்கெட் விளையாடி வருகிறார். அதனால் சாதித்தும் வருகிறார். அவரை நாங்கள் கட்டுப்படுத்துவதில்லை. நீங்களும் அப்படிச் செய்யாமல் இருப்பீர்களா?’ என ஊடகங்களுக்குக் கேள்வி எழுப்பினார் ரோகித்.

Fans celebrating rishabh pant's comeback

மேலும் அவர், ‘ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் இங்கிலாந்துக்கு எதிராகவும் அவர் மிகச் சிறப்பாக விளையாடி இருக்கிறார். இனிமேல் அவருக்கு இறங்கு முகமே கிடையாது. ஊடகங்கள் அவர் மீது அழுத்தத்தைத் திணிக்காமல் இருக்கும் வரையில் பன்டுக்கு எந்தப் பிரச்சனையும் எழாது என நம்புகிறேன்.

நாளுக்கு நாள் பன்ட், கிரிக்கெட் குறித்து மேலும் புரிந்து கொண்டு தன் ஆட்டத்தை மேம்படுத்தி வருகிறார். அவர் அப்படிச் செய்வது அணிக்கு மிகவும் நல்லது’ எனப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version