சினிமா செய்திகள்
‘நானும் என் குடும்பமும் வாழ முக்கியக் காரணம் தனுஷ்’- நெகிழும் ரோபோ சங்கர்
![dhanush- robo shankar - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/dhanush-robo-shankar.jpg)
‘இன்று நானும் என் குடும்பமும் 3 வேளை சாப்பிடுகிறோம் என்றால் அதற்கு முக்கியக் காரணமே தனுஷ் தான்’ என நடிகர் ரோபோ சங்கர் நெகிழ்ச்சி உடன் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் கடை திறப்பு விழா ஒன்றில் பங்கேற்ற நடிகர் ரோபோ சங்கர் பங்கேற்று பேசினார். அப்போது சங்கர் கூறுகையில், “எனக்கு தொழில் சார்ந்து வாய்ப்பு கொடுத்தவர் மட்டுமல்ல தனுஷ். எனக்கு வாழ்க்கையைக் கொடுத்ததும் அவர்தான். கொரோனா காலத்தில் எனக்கு மிகப்பெரிய கஷ்டம் இருந்தது.
அந்த சமயத்தில் யாரிடம் என்ன கேட்பது எனத் தெரியவில்லை. அப்போது திடீரென தனுஷ் அவர்களுக்கு திடீரென போன் செய்தேன். டெல்லி கிளம்பிக் கொண்டிருப்பதாக சொன்னார். அந்த நேரத்தில் கேட்கலாமா என யோசித்தேன். ஆனாலும், வேற வழி இல்லை எனக் கேட்டுவிட்டேன். அந்த அவசரத்திலும் எனக்குத் தேவையான உதவிகளை ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு கிளம்பினார்.
இன்றைய சூழலில் நானும் என் குடும்பமும் 3 வேளை சாப்பிடுகிறோம் என்றால் அதற்குக் காரணம் தனுஷ் தான். அவர் எனக்கு வாய்ப்பு மட்டுமில்லை வாழ்க்கையும் கொடுத்துள்ளார்” என நெகிழ்ச்சி உடன் பகிர்ந்து கொண்டார்.