உலகம்

வாயை பிளந்த ரோடு.. உள்ளே விழுந்து போராடிய பெண்கள்.. பரபரப்பு

Published

on

அன்காரா: துருக்கியில் சாலை ஒன்று திடீர் என்று உடைந்ததில் இரண்டு பெண்கள், பாதாள சாக்கடைக்குள் விழுந்து இருக்கிறார்கள்.

துருக்கியின் டியார்பகிர் நகரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சாலையும், நடைமேடையும் இணையம் பகுதி மொத்தமாக உடைந்து விழுந்துள்ளது.

அந்த பகுதி உடைந்து பெரிய பள்ளம் ஏற்படும் சமயத்தில் அங்கு இரண்டு பெண்கள் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இவர்கள் பேசிக்கொண்டே இருக்கும் போது சாலை அப்படியே உடைந்து உள்ளே சென்றுள்ளது.

இவர்களை மீட்க 4 மணி நேரம் மீட்பு படை வீரர்கள் போராடினார்கள்.ஆனால் இவர்கள் இருவரும் தற்போது மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு காலில் மட்டுமே காயம் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

seithichurul

Trending

Exit mobile version