தமிழ்நாடு
புதுக்கோட்டை அருகே வேனும் கன்டெய்னர் லாரியும் மோதி விபத்து.. 10 பேர் பலி
புதுக்கோட்டை திருமயம் அருகே இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. கேரளாவில் இருந்து ஆந்திரா நோக்கி செல்லும் போது விபத்து ஏற்பட்டுள்ளது.
![TNJ28ACCIDENT_G+TNJ28ACCIDENT.jpg - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/01/TNJ28ACCIDENT_GTNJ28ACCIDENT.jpg.jpg)
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே நடந்த சாலை விபத்தில் சபரிமலையில் தரிசனம் செய்துவிட்டு வந்த ஐயப்ப பக்தர்கள் 10 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளார்.
புதுக்கோட்டை திருமயம் அருகே இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. கேரளாவில் இருந்து ஆந்திரா நோக்கி செல்லும் போது விபத்து ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன் 12 பேர் சபரிமலை கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்று இருக்கிறார்கள். இந்த நிலையில் தரிசனம் செய்துவிட்டு நேற்று இரவு ஆந்திரா நோக்கி சென்றுள்ளனர்.
இன்று மதியம் இவர்களின் வேன் புதுக்கோட்டை அருகே வரும் போது விபத்திற்கு உள்ளாகி உள்ளது. அந்த வேன் மிகவும் அதிக வேகத்தில் சென்று இருக்கிறது. அப்போது நெடுஞ்சாலையில் எதிரே வந்த லாரி மீது வேகமாக சென்ற வேன் மோதியுள்ளது.