சினிமா செய்திகள்

அஜித்தை தேவையில்லாமல் வம்புக்கு இழுக்கும் செல்வமணி: ரசிகர்கள் கண்டனம்

Published

on

நடிகர் விஜய் தன்னுடைய படங்களின் படப்பிடிப்பை சென்னையில் வைத்திருப்பதால் பெப்சி தொழிலாளர்களுக்கு அதிகம் வேலை கிடைக்கிறது என்றும் ஆனால் அஜித்தின் படங்கள் பெரும்பாலும் வெளி மாநிலத்தில் நடப்பதால் பெப்சி தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்றும் விஜய் போலவே அஜித்தும் சென்னையில் படப்பிடிப்பு வைக்க வேண்டுமென தயாரிப்பாளர்களை வலியுறுத்த வேண்டும் என்றும் ஆர்கே செல்வமணி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பெப்சி தொழிலாளர்கள் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பெப்சி தொழிலாளர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டது என்பதும் இந்த ஒப்பந்தத்தை முறையாக கடைப்பிடிப்பது விஜய் மட்டுமே என்றும் அவர் தனது பெரும்பாலான படங்களின் படப்பிடிப்பை சென்னையில் வைப்பதால் தொழிலாளர்கள் பயன் பெறுகிறார்கள் என்றும் தெரிவித்தார் .

ஆனால் அதே நேரத்தில் அஜித் தன்னுடைய படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் ஐதராபாத்தில் நடத்துவதால் அங்குள்ள தொழிலாளர்களுக்கு தான் வேலை கிடைக்கிறது என்றும் தமிழக தொழிலாளர்கள் வேலை கிடைப்பதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார் .

இதனை அடுத்து அஜீத் ரசிகர்கள் ஆர்கே செல்வமணிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அஜித்தை பொருத்தவரை ஒரு படத்தின் எந்த ஒரு விதத்திலும் தலையிட மாட்டார் என்றும், முடிவு எடுக்கும் உரிமையை முழுமையாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் அவர் விட்டு விடுவார் என்றும் அவர் தனது கேரக்டர் தவிர மற்ற எதிலும் அவர் தலையிடுவதில்லை என்றும் இதுபோன்ற ஒருவருக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது என்றும் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

Trending

Exit mobile version