சினிமா

பிக் பாஸ் டைட்டிலை மூன்று முறை வென்ற ரித்விகா!

Published

on

நடிகர் கமல் விஜய் டிவியில் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த முறை நூறு நாட்களை தாண்டி இந்த நிகழ்ச்சி கூடுதலாக ஒரு வாரம் நீடித்தது. இறுதியாக 13 போட்டியாளர்கள் வெளியேறி கடைசி வாரம் பிக்பாஸ் வீட்டில் 4 பேர் இருந்தனர்.

அதில் ஜனனி நேற்று முன்தினம் வெளியேற நேற்று விஜயலட்சுமி, ஐஸ்வர்யா, ரித்விகா ஆகியோர் தான் இருந்தனர். அதில் விஜயலட்சுமி முதலில் வெளியேற இறுதியாக ஐஸ்வர்யா மற்றும் ரித்விகா மட்டுமே இருந்தனர். மிகுந்த பதற்றத்துடன் இருந்த இருவரில் ரித்விகா வெற்றியாளராக இறுதியாக கமல் அறிவித்தார்.

வெற்றி பெற்ற ரித்விகாவுக்கு பிக் பாஸ் டிராஃபி மற்றும் 50 லட்சம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது. இந்த பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் வியக்கத்தக்க வகையில் ரித்விகா மூன்று மூறை பிக் பாஸ் டைட்டிலை பெற்ற அரிதான சம்பவம் நடந்துள்ளது.

முதலில் டாஸ்க் ஒன்றின் போது ரித்விகா கையில் பிக் பாஸ் டாட்டூ போடப்பட்டது. மிகுந்த வலியின் போதும் அதனை கண்ணீருடன் பெற்றுக்கொண்டார் ரித்விகா. இரண்டாவது முறையாக தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றபோது அவரது கையில் இருந்து ரித்விகா பிக் பாஸ் டிராஃபியை பெற்றுக்கொண்டார். அப்போதும் ரித்விகா மகிழ்ச்சியில் கண்ணீர் வடித்தார்.

மூன்றாவது முறையாக நேற்று கமல் கையால் பிக் பாஸ் டிராஃபியை வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு பெற்றுக்கொண்டார். அப்போதும் கண்ணீர் மல்க பிக் பாஸ் டைட்டிலை ரித்விகா பெற்றுக்கொண்டார்.

seithichurul

Trending

Exit mobile version