இந்தியா
இளம் மல்யுத்த வீராங்கனை ரித்திகா போகாட் தற்கொலையா?
இந்தியாவின் இளம் மல்யுத்த வீராங்கனை ரித்திகா போகாட் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்தியாவுக்காக சர்வதேச அளவில் மல்யுத்த போட்டியில் விளையாடியவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த போகாட் சகோதரிகள் என்பது தெரிந்ததே. சமீபத்தில் நடந்த மல்யுத்த போட்டியில் இறுதிப் போட்டியில் எதிர்பாராத வகையில் ரித்திகா போகாட் தோல்வியைத் தழுவினார். இதனை அடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது
இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ரித்திகா போகாட் தூக்கில் தொங்கி தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தற்கொலைக்கான காரணம் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்ததாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
ரித்திகா போகாட் மற்றும் அவரது சகோதரி வாழ்க்கை வரலாற்றை தழுவி தான் அமீர்கான் நடித்த தங்கல்’ என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.