கிரிக்கெட்
பேச மட்டும் தான் தெரியும்: ஆஸ்திரேலியா கேப்டனுக்கு பதிலடி கொடுத்த ரிஷப் பண்ட்!
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்பேர்னில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் வெற்றிவாய்ப்பு மிக அருகில் உள்ளது. இன்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 258 ரன்களுக்கு 8 விக்க்டெட்டை இழந்துள்ளது.
முன்னதாக இந்திய அணியின் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்தபோது அவரை கிண்டல் செய்யும் விதமாக ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டன் டிம் பெய்ன் பேசினார். ரிஷப் பண்ட் ஒருநாள் போட்டியில் இடம்பெறாததை சுட்டிக்காட்டும் விதமாக நான் எனது மனைவியுடன் இரவு படத்துக்கு செல்லும்போது, நீ என் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.
உனக்கு குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள தெரியுமா எனவெல்லாம் பேசியுள்ளார் டிம் பெய்ன். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக டிம் பெய்ன் பேட்டிங் செய்ய வந்தபோது ரிஷப் பண்ட் ஜடேஜாவிடம், நமக்கு இங்கு தற்போது சிறப்பு விருந்தினர் ஒருவர் வந்திருக்கிறார். நீங்கள் எப்போதாவது தற்காலிக கேப்டன்னை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவருக்கு பேசுவது மிகவும் பிடிக்கும். அதுமட்டுத்தான் அவருக்கு தெரியும். பேசுவது மட்டுமே என்றார்.