கிரிக்கெட்
INDvENG- சதம் விளாசிய பன்ட்; அரைசதம் அடித்துப் போராடும் சுந்தர்- இந்தியாவின் மாஸ் கம்-பேக்!!!
![Rishabh Pant - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/03/Rishabh-Pant.jpg)
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
நேற்று இங்கிலாந்து அணியை 205 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த இந்தியா, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. தற்போது இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 290 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.
1⃣0⃣0⃣-run stand! ????????@RishabhPant17 & @Sundarwashi5 complete a century partnership as #TeamIndia move closer to 250. ????????@Paytm #INDvENG
Follow the match ???? https://t.co/9KnAXjaKfb pic.twitter.com/YF3aDRRcbG
— BCCI (@BCCI) March 5, 2021
இதன் மூலம் இங்கிலாந்து அணியை விட இந்தியா 85 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்தியா சார்பில் ரிஷப் பன்ட் சதம் விளாசி அசத்தினார். அவருக்குப் பக்க பலமாக இருந்த ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் அரைசதம் விளாசி தொடர்ந்து விளையாடி வருகிறார். பன்ட், 118 பந்துகளில் 101 ரன்கள் குவித்து அவுட்டானார்.
5⃣0⃣! ????????@Sundarwashi5 brings up his 3⃣rd Test half-century. ????????#TeamIndia‘s lead moves past 70. @Paytm #INDvENG
Follow the match ???? https://t.co/9KnAXjaKfb pic.twitter.com/j62fSXEEGX
— BCCI (@BCCI) March 5, 2021
ஒரு கட்டத்தில் 150 ரன்கள் எடுப்பதற்கு முன்னரே இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. ஆனால் பன்ட் மற்றும் சுந்தரின் ஜோடி இந்தியாவின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. இதன் மூலம் தற்போது இந்திய அணி வலுவான நிலையில் இருக்கிறது.