கிரிக்கெட்

உல்லாச மோடில் ரிஷப் பன்ட்; தோனி – சாக்‌ஷியுடன் ஃபன் பார்ட்டி

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய ஹாட்-டாப்பிக்காக இருப்பது ரிஷப் பன்ட் தான். சில நாட்களுக்கு முன்னர் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரின் ஹீரோவாக உருவெடுத்துள்ளது ரிஷப் பன்ட் தான். இரு அணிகளுக்கும் இடையிலான 4வது மற்றும் கடைசி போட்டியில் கடைசி வரை களத்தில் நின்று, அணியின் வெற்றியை உறுதி செய்தார் பன்ட். இதனால் இந்திய டெஸ்ட் அணியின் அவரது இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பன்ட், தனக்கு கிடைத்திருக்கும் ஓய்வு நேரத்தை உல்லாசமாக ரிலாக்ஸ் மோடில் கழித்து வருகிறார்.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, அவரது மனைவி சாக்‌ஷி ஆகியோரோடு பன்ட், ஃபன் அவுட்டிங் சென்றுள்ளார். இது குறித்தான போட்டாவை சாக்‌ஷி, தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அடுத்ததாக இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் டெஸ்ட் ஆரம்பமாகிறது. இந்தப் போட்டியிலும் தொடரிலும் ரிஷப் பன்ட் மீண்டும் அதிரடி பேட்டிங் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version