கிரிக்கெட்

டெஸ்ட் தரவரிசை: டாப் 10க்குள் நுழைந்த ரிஷப் பன்ட்! 

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் மேட்ச் வின்னராக உருவெடுத்திருக்கிறார் ரிஷப் பன்ட். அவர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்நிலையிலங் ரிஷப் பன்ட் செய்த சாதனைகளை இன்னொருவரால் முறியடிக்கவே முடியாது என்று அடித்துச் சொல்லி புகழாரம் சூட்டியுள்ளார் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்திய கிரிக்கெட் அணி கைப்பற்றி வரலாற்றுச் சாதனைப் புரிந்த கையோடு, இங்கிலாந்துக்கு எதிராகவும் டெஸ்ட் தொடரை வென்றது. இதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் இந்தியா முன்னேறியுள்ளது. இந்த இரு தொடர்களையும் இந்தியா, வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பன்ட். இரு தொடர்களில் பன்ட் சதம் விளாசிய போட்டிகளில், அவர் அதிரடி பேட்டிங் காரணமாக இந்தியா வெற்றி பெறும் நிலை ஏற்பட்டது.

இப்படி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காரணத்திற்காக டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ரிஷப் பன்ட் 747 புள்ளிகளுடன் 7 இடங்கள் நகர்ந்து 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

தற்போது ரோஹித் சர்மா, நியூஸிலாந்து வீரர் ஹென்றி நிகோலஸ் ஆகியோருடன் 7-வது இடத்தை ரிஷப் பன்ட் பகிர்ந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப்பந்த் பெறும் மிகச்சிறந்த தரவரிசை இதுவாகும். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 96 ரன்கள் குவித்து நாட் அவுட்டாக இருந்த வாஷிங்டன் சுந்தர் 39 இடங்கள் நகர்ந்து 69-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

Trending

Exit mobile version