தமிழ்நாடு
“சோறுதான் முக்கியம்” நிலக்கரி விவகாரத்தில் பாஜகவின் வானதி சீனிவாசன் பேச்சு!
![Vanathi Srinivasan - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/04/Vanathi-Srinivasan.jpg)
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளநிலையில் தமிழக சட்டசபையில் இந்த விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
![Vanathi-BJP - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/04/Vanathi-BJP-1024x768.jpg)
திமுக, காங்கிரஸ், அதிமுக, பாமக, விசிக கட்சிகள் சார்பாக கொண்டு வரப்பட்ட இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பேசி தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இதில் பாஜக சார்பாக பேசிய வானதி சீனிவாசன், ஒரு மனிதனுக்கு சோறு வேண்டுமா, கரண்ட் வேண்டுமா என்று கேட்டால் சோறுதான் முக்கியம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. டெல்டா பகுதியில் விவசாயம் எவ்வளவும் முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
இந்த நிலக்கரி சுரங்க விவகாரத்தில் 3 டெல்டா பகுதிகளில் ஏலத்திற்கு அறிவித்ததை மாற்ற வேண்டும். இந்த அறிவிப்பில் இருந்து மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக பாஜக சார்பாக நிலக்கரித்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளோம். இது தொடர்பாக வலியுறுத்தவும் செய்வோம் என தெரிவித்தார்.