தமிழ்நாடு

10,12 வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு தேதி: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Published

on

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு தேதியை பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்துள்ளது.

கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை என்றும் ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா வைரஸ் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19ஆம் தேதி நடைபெறும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த தேர்வு தேதி ஒத்தி வைக்கப்படும் என்று மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இந்த நிலையில் 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு வரும் 19ஆம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது.

இதனை அடுத்து மாணவர்கள் தேர்வுக்கு தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் திருப்புதல் தேர்வு தேதியில் எந்தவித மாற்றமும் இல்லை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Trending

Exit mobile version