Connect with us

கிரிக்கெட்

மும்பை அணிக்கு விட்டு கொடுத்ததா பஞ்சாப்? மேட்ச் பார்ப்பவர்கள் முட்டாள்களா?

Published

on

நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் பஞ்சாப் அணிக்கு இடையிலான போட்டியில் மும்பை அணி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக பஞ்சாப் அணி வேண்டுமென்றே விட்டுக் கொடுப்பது போல் இருந்ததாக விமர்சகர்கள் சிலர் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் அடித்து ஆட வேண்டும் என்பதை மறந்து மிகவும் சுமாராகவே விளையாடியது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து வெறும் 136 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பஞ்சாப் அணியின் முக்கிய பேட்ஸ்மேனான கெயில் நேற்று ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறக்கப்படாதது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய போட்டியில் பஞ்சாபின் மயங்க் அகர்வால் காயம் அடைந்ததால் விளையாடவில்லை என்பதால் அவருக்கு பதில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக கிறிஸ் கெயில் களமிறக்கபடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் திடீரென மந்தீப் சிங் களமிறக்கப்பட்டார். அவர் பவர்பிளே ஓவரில் 14 பந்துகளுக்கு 15 ரன்கள் மட்டுமே அடித்து அவுட்டாகி வெளியேறினார். பவர் பிளேயில் கெயில் களமிறங்கியிருந்தால் மும்பை பந்துவீச்சாளர்களின் பந்துகளை வெளுத்து வாங்கி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பந்து வீச்சிலும் பஞ்சாப் அணியினர் வேண்டுமென்றே சுமாராக பந்து வீசியது போல் தான் இருந்தது. ஹர்திக் பாண்டியாவுக்கு ஷமி வீசிய 19வது ஓவரில் இரண்டு பவுண்ட்ரிகள் மற்றும் ஒரு சிக்சர் என 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 20ஆவது வேலை இல்லாமல் செய்துவிட்டது என்பது பஞ்சாப் அணி விட்டுக்கொடுத்தது என்பதை உறுதி செய்வதாக விமர்சகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை அணி நேற்று தோல்வியடைந்திருந்தால் தொடரில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் மும்பை அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே வேண்டுமென்றே பஞ்சாப் அணி விட்டுக் கொடுத்தது போல் தெரிந்ததாகவும் விமர்சகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்த அனைத்து போட்டிகளிலும் மும்பை அணி பிளே ஆப் சுற்றில் விளையாடிய நிலையில் இந்த தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு செல்லவில்லை என்ற பெரிய அவமதிப்பாக இருக்கும் என்பதால் மும்பை அணிக்கு பஞ்சாப் அணி விட்டுக் கொடுத்தது என்று கூறப்படுகிறது.

கடைசி ஓவரில் 4 ரன் கூட எடுக்க விடாமல் தடுத்து நிறுத்தும் அளவுக்கு பந்துவீசும், ஐபிஎல் போட்டியில் கடைசி ஓவருக்கு முந்திய ஓவரிலேயே 16 ரன்களை ஷமி விட்டுக் கொடுக்கிறார் என்றால் கண்டிப்பாக இதில் ஏதோ பின்னணி இருக்கிறது என்றும் மேட்ச் பார்ப்பவர்களை ஐபிஎல் நிர்வாகத்தினர் முட்டாள் ஆக்குகின்றனர் என்றும் விமர்சகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!