ஜோதிடம்

ரிஷபத்தில் குரு வக்ரம் – இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருங்கள்!

Published

on

2024ஆம் ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி, குரு பகவான் ரிஷபத்தில் இருந்து வக்ரகதியில் பின்நோக்கி இயங்கத் தொடங்குகிறார். குருவின் இந்த மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் அதிர்ஷ்டத்திலும், துரதிருஷ்டத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

ஆண்டிற்கு ஒருமுறை குரு தனது சஞ்சாரத்தை மாற்றும்போது, சிலருக்கு நன்மைகளை வழங்கிய போதும், இப்போது வக்ரமாக மாறுவதால், சில ராசிக்காரர்களுக்கு இங்கு சவால்களையும், நஷ்டங்களையும் ஏற்படுத்தும்.

கஷ்டங்களை சந்திக்கப்போகும் ராசிகள்:

1. கன்னி ராசி (Virgo):

குருவின் பெயர்ச்சியால் நன்மைகள் அனுபவித்த கன்னி ராசிக்காரர்களுக்கு, வக்ர குரு எதிர்மாறாக செயல்படும். நண்பர்கள் பகைவராக மாறும் காலம் இது. முக்கிய முடிவுகளில் மிகுந்த கவனம் தேவை.

2. தனுசு ராசி (Sagittarius):

சனியின் பெயர்ச்சியால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த தனுசு ராசிக்காரர்களுக்கு, குருவின் வக்ரம் மேலும் சவால்களை உருவாக்கும். குடும்பம், தொழிலில் நெருக்கடி அதிகரிக்கும்.

3. மீன ராசி (Pisces):

குரு பகவான் மீன ராசிக்காரர்களுக்கு சில நல்லபலன்களை வழங்கினாலும், இந்த காலகட்டத்தில் செலவுகள் அதிகரிக்கும். அதனால், அவற்றை நியாயமான செலவுகளாக மாற்ற முயற்சிக்கவும்.

4. துலாம் ராசி (Libra):

குருவின் வக்ரகதி இயக்கம், துலாம் ராசிக்காரர்களுக்கு மனக்கவலைகள் அதிகரிக்கும் நேரத்தை ஏற்படுத்தும். இதனால், அமைதியாக இருக்கவும், சிக்கல்களை திறமையாக சமாளிக்கவும்.

Poovizhi

Trending

Exit mobile version