இந்தியா
32 வருடங்களுக்கு முன் ரூ.100 லஞ்சம் வாங்கிய அதிகாரி.. தீர்ப்பு என்ன தெரியுமா?
32 வருடங்களுக்கு முன்னர் ரயில்வே அதிகாரி ஒருவர் 100 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கின் தீர்ப்பு தற்போது வெளிவந்த நிலையில் அந்த அதிகாரிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1991 ஆம் ஆண்டு வடக்கு ரயில்வேயில் வேலை பார்த்தவர் ராம்குமார் என்பவர் 100 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதனை அடுத்து இந்த வழக்கில் அவர் இரண்டு நாட்கள் மட்டும் சிறையில் இருந்ததாகவும் அதன் பின்னர் ஜாமினில் வெளிவந்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் தற்போது அந்த அதிகாரி ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது தான் வெளிவந்துள்ளது. இந்த வழக்கில் நவம்பர் 2022 ஆம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பில் 100 ரூபாய் லஞ்சம் பெற்ற அதிகாரிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிப்பதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது 82 வயதான அந்த நபர் தன்னுடைய வயதை காரணம் காட்டி சிறை தண்டனையிலிருந்து விலக்கு வேண்டும் என்று கேட்ட நிலையில் அதற்கு நீதிபதி கருணை காட்ட மறுத்துவிட்டார். அவ்வாறு செய்வது சமூகத்திற்கு தவறான செய்தியை கொடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டு ஒரு வருட சிறைதண்டனையை அனுபவித்து தீர வேண்டும் என்று உத்தரவிட்டார். அதுமட்டும் இன்றி குற்றவாளிக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
32 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்த சம்பவத்தின் போது ஜாமினில் வெளிவருவதற்கு முன்னர் தான் இரண்டு நாட்கள் சிறையில் இருந்ததாகவும் அந்த சிறை தண்டனை போதுமானதாக இருக்கும் என்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட து.
இந்த வழக்கில் இரண்டு நாட்கள் சிறை தண்டனை என்பது போதுமானதாக இல்லை என்றும் லஞ்சத்தின் அளவு, குற்றத்தின் தன்மை மற்றும் பிற காரணங்களை கருத்தில் கொண்டு ஓராண்டு சிறை தண்டனையை அவர் அனுபவத்தை தீர வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
1991 ஆம் வருடம் 100 ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக 32 ஆண்டுகள் கழித்து 82 வயதான ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்ட தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குற்றமில்லை.