Connect with us

இந்தியா

32 வருடங்களுக்கு முன் ரூ.100 லஞ்சம் வாங்கிய அதிகாரி.. தீர்ப்பு என்ன தெரியுமா?

Published

on

32 வருடங்களுக்கு முன்னர் ரயில்வே அதிகாரி ஒருவர் 100 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கின் தீர்ப்பு தற்போது வெளிவந்த நிலையில் அந்த அதிகாரிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1991 ஆம் ஆண்டு வடக்கு ரயில்வேயில் வேலை பார்த்தவர் ராம்குமார் என்பவர் 100 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதனை அடுத்து இந்த வழக்கில் அவர் இரண்டு நாட்கள் மட்டும் சிறையில் இருந்ததாகவும் அதன் பின்னர் ஜாமினில் வெளிவந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் தற்போது அந்த அதிகாரி ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது தான் வெளிவந்துள்ளது. இந்த வழக்கில் நவம்பர் 2022 ஆம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பில் 100 ரூபாய் லஞ்சம் பெற்ற அதிகாரிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிப்பதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது 82 வயதான அந்த நபர் தன்னுடைய வயதை காரணம் காட்டி சிறை தண்டனையிலிருந்து விலக்கு வேண்டும் என்று கேட்ட நிலையில் அதற்கு நீதிபதி கருணை காட்ட மறுத்துவிட்டார். அவ்வாறு செய்வது சமூகத்திற்கு தவறான செய்தியை கொடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டு ஒரு வருட சிறைதண்டனையை அனுபவித்து தீர வேண்டும் என்று உத்தரவிட்டார். அதுமட்டும் இன்றி குற்றவாளிக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

32 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்த சம்பவத்தின் போது ஜாமினில் வெளிவருவதற்கு முன்னர் தான் இரண்டு நாட்கள் சிறையில் இருந்ததாகவும் அந்த சிறை தண்டனை போதுமானதாக இருக்கும் என்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட து.

இந்த வழக்கில் இரண்டு நாட்கள் சிறை தண்டனை என்பது போதுமானதாக இல்லை என்றும் லஞ்சத்தின் அளவு, குற்றத்தின் தன்மை மற்றும் பிற காரணங்களை கருத்தில் கொண்டு ஓராண்டு சிறை தண்டனையை அவர் அனுபவத்தை தீர வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

1991 ஆம் வருடம் 100 ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக 32 ஆண்டுகள் கழித்து 82 வயதான ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்ட தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குற்றமில்லை.

author avatar
seithichurul
தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்19 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!