Connect with us

தமிழ்நாடு

நான் நீதிபதியாக இருந்திருந்தால்: விஜய் வரி வழக்கு குறித்து முன்னாள் நீதிபதி சந்துரு பேட்டி

Published

on

நான் நீதிபதியாக இருந்திருந்தால் இந்த வழக்கின் தீர்ப்பு வேறு மாதிரி இருந்திருக்கும் என முன்னாள் நீதிபதி சந்துரு அவர்கள் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

பாண்டிச்சேரியில் குறைந்த வரி செலுத்தி தமிழகத்திற்கு வாகனங்களை கொண்டு வருவதால் தான் நுழைவு வரி என்ற வரி விதிக்கப்பட்டது. ஆனால் விஜய் பாண்டிச்சேரியில் கார் வாங்கவில்லை. இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்து சுங்க வரி கட்டி முறையாக கொண்டு வந்துள்ளார். கப்பல் வழியாக வரும் வண்டிகளுக்கு நுழைவு வரி கிடையாது. ஆனால் நுழைவு வரி சட்டம் குறித்து சட்டம் புரிந்தவர்களுக்கே இன்னும் குழப்பமாக இருக்கிறது.

நான் நீதிபதியாக இந்த வழக்கில் இருந்திருந்தால் இந்த மாதிரி தீர்ப்பை கண்டிப்பாக கொடுத்திருக்க மாட்டேன். இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் வரியிலிருந்து விலக்கு கேட்பது உரிமை. இந்தியாவில் உள்ள பல பணக்காரர்கள் வரி விலக்கு கேட்டு வழக்கு தொடுத்தார்கள். வரிவிலக்கு கிடைத்தால் சந்தோஷப்படுவார்கள். இல்லை என்றால் வரியை கட்டப்பட்ட போகிறார்கள்.

விஜய் வழக்கில் நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தது கூட தவறில்லை. ஆனால் ரியல் ஹீரோ, ரீல் ஹீரோ என்பதெல்லாம் தேவையில்லாத விஷயம். விஜய் தனது மேனேஜர் சொன்னதையும், அவருக்கு அறிவுரை சொன்னதையும் கேட்டு அவர் வழக்கு தொடுத்திருக்கிறார். அதற்கு விஜய்யை ஏன் குறை சொல்ல வேண்டும். அவருக்கு ஆலோசனை சொன்னவர்களையும் வழக்கு தொடுக்க அட்வைஸ் கொடுத்த வழக்கறிஞர்களையும் தான் குற்றம் சாட்ட வேண்டும்.

அவர் வரிஏய்ப்பு செய்கிறார் என்று எப்படி சொல்ல முடியும்? வரிவிலக்கு இல்லை என்று சொன்னால் வரியை கட்டப் போகிறார். அதற்கு அபராதம் கட்ட போகிறார். இதற்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? என்று தெரியவில்லை.

விஜய் ஒரு டிகிரி படித்தவர் என்றாலும் அவருக்கு எல்லா சட்டமும் தெரிய வேண்டும் என்று அவசியமில்லை. இந்த வழக்கில் விஜய்யை தேவையில்லாமல் விமர்சனம் செய்து இருப்பதாகவே நான் கருதுகிறேன். விஜய் தரப்பில் இரண்டு நீதிபதிகளிடம் அப்பீல் போட்டால் இந்த கருத்தை எல்லாம் ரத்து செய்து விடுவார்கள். ஒருவருடைய கேரக்டரை டேமேஜ் செய்தால் தாராளமாக அப்பீல் செய்யலாம் என்று நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார்.

இந்தியா6 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்7 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!