தமிழ்நாடு

கமல், ரஜினிக்கு கிடைக்கும் அடி மற்ற நடிகர்களுக்கு பயத்தைக் கொடுக்கணும்!- சீமான்

Published

on

நடிகர்களான கமலும் ரஜினியும் வருகிற தேர்தலில் பெறப்போகும் அடி இனி அரசியலுக்கு வரத் துடிக்கும் நடிகர்களுக்குப் பெரும் பாடமாக இருக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கிக் கொண்டு வருகிறது. பல அரசியல் தலைவர்களும் தங்களது தேர்தல் பிரசாரங்களைத் தொடங்கி விட்டனர். நடிகர்களான ரஜினியும் கமலும் முதன்முறையாக தமிழக சட்டசபைத் தேர்தலை நேரடியாக சந்திக்கின்றனர். கமல் எம்.எல்.ஏ ஆவதற்காகப் போட்டியிடுகிறார். இத்தகைய சூழலில் நடிகர்களின் அரசியல் குறித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் பேசியுள்ளார்.

சீமான் கூறுகையில், “வருகிற தேர்தலில் ரஜினி, கமலுக்குக் கிடைக்கும் அடி அடுத்து நடிகர்கள் அரசியலுக்கே வர பயப்பட வேண்டும் என்ற அளவுக்கு இருக்க வேண்டும். அரசியலே தெரியாமல் பேசும் கமல் மக்களைக் கேவலமாக நினைக்கிறார். பரப்புரைகளின் போது எம்.ஜி.ஆர் பெயரைப் பயன்படுத்தினால் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள்” எனப் பேசியுள்ளார்.

Trending

Exit mobile version